Friday, November 6, 2009

எழுச்சி தமிழர் .தொல்.திருமாவளவன்

அடங்க மறு ! அத்து மீறு ! திமிறி எழு ! திருப்பி அடி !

மக்கள் விடுதலை மண்டியிட்டுப் பெறுவதல்ல!

மடுவை மலையாக்கு ! மண்ணைச் சிவப்பாக்கு !

அண்ணலே இனியும் நாங்கள் ஆடுகளல்ல !
இளிச்சவாயர் கூட்டமும் அல்ல !
சீறிப் பாயும் விடுதலைச் சிறுத்தைகள்.

உன்னைப் படி ! தாய் மண்ணைப் பிடி !

படையை பெறுக்கு ! தடையை நொறுக்கு !

அடக்க நினைத்திடும் சிறைச்சாலை
அது அரசியல் கற்பிக்கும் பாடச்சாலை !

படையை பெறுக்கு ! தடையை நொறுக்கு !

திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது !
திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

தலை நிமிர சேரி திரளும் ! அன்று தலை கீழாய் நாடு புரளும் !

சேரியில் புரட்சியின் சினை வெடிக்கும் ஆதிக்க வெறி
சாதியத்தின் தலை நறுக்கி பகை முடிக்கும் !

படை நடுங்கிட சீறி எழும்பு - நாளை
பழி தீர்த்திடும் உன் வீரத்தழும்பு !

நெருக்கடிகள் சூழ்ந்த போதிலும் கொள்கை நெறிப்படி வாழ்தல் வீரம் !
நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறிமீறி பாய்தல் வீரம் !

பாதையில் குறுக்கிடும் தடை மீறு !
அதிரடி பாய்ச்சலில் படைத்திடு வரலாறு !

கேட்பது பிச்சை ! மீட்பது உரிமை !

எத்தனைக் காலந்தான் பொறுத்திறுப்பாய் - அட
எழுந்திட வேண்டாமோ எரிநெருப்பாய் !

எம் பதிவுகள் வெறும் கண்ணீர் துளிகளல்ல
கலகத்தின் சினைகள் !

அச்சம் தவிர்த்து சினந்து கிளம்பு - சாதியின்
உச்சந்தலையில் இடியாய் இறங்கு !

ஒரு நாள் நிச்சயம் விடியும் - அது
உன்னால் மட்டுமே முடியும் !

சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறும் ! வரலாறு மாறும் !

ஒப்பாரி ஒலங்கள் சேரிக்கு மட்டுமே சொந்தமில்லை !

பொய் வழக்கும் கொடுஞ்சிறையும் போராளிகளை என்னச் செய்யும்.

கடைசி மனிதனுக்கும் சனநாயகம் !
எளியமக்களுக்கும் அதிகாரம் !

1 comment:

  1. உங்கள் எழுச்சியை பாருங்கள் http://www.youtube.com/watch?v=veEmhfkl--M

    ReplyDelete